கொஞ்சம் மழை பெய்தாலும் சென்னை நாறிப் போகிறது. நேற்று வரை மழையே இல்லை என்று புலம்பிய நாக்கு நான்கு தூறலைப் பார்த்ததும் 'அப்பா! என்ன மழை' என்று ஆச்சரியப்பட்டுப் போகிறதைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அலுவலகத்துக்குப் போய் வருவதற்குள் பல காவிரி ஆறுகளைச் சென்னை வீதிகளீல் பார்த்து விட்டேன் இன்று. சாக்கடை கலந்த 'காவிரி'.
எல்லோரும் வழக்கம் போல் அரசாங்கத்தை திட்டித் தீர்த்தாயிற்று. எவ்வளவு தண்ணீர் வீணாகிறது. இதை சேர்த்து வைக்கிற வழிமுறைகளை ஏன் இந்த அரசு செய்வதில்லை என்று ஒருமித்த குரலில் அழுது புலம்பியாயிற்று.மழை நீர் சேகரிப்பு பொதுமக்களுக்கு மட்டும்தானா? அரசுக்கு இல்லையா என்று பொதுவாக எல்லோருமே பேசிக் கொண்டோம். என்ன பேசி என்ன பயன்.நாளை மழை நின்று சென்னை காய ஆரம்பித்ததும் எல்லாம் மறந்து போய் அடுத்த மழைக்கு இதையே தூசுத் தட்டி பேசப் போவது இப்போதே தெரிகிறது. மாமழை போற்றுதும்.

No comments:
Post a Comment