Saturday, November 7, 2009

கலவர பூமியில்


பேசித் தீர்த்து விடு
உன் கனவுகளை,
உன் கண்ணீரை
மடைதிறந்தது போல்--
தோள் கொடுக்கத் தோழனாய்
தவறிச் சரிகையில்
தாங்கிக் கொள்ளும் நண்பனாய்
நாளைக்கு
இருப்பேனோ இல்லையோ

நேற்றைக்கு இருந்த என்
அன்னையும், அப்பாவும்
உன் தாயும் தந்தையும்
தொழுகையிலேயே
குண்டடிப்பட்டார்கள்
வீடுசென்று சேருமுன்னே
என் இருப்பும் அப்படியே

குறைந்தபட்சம்
உன் வலி தெரிந்தவனாய்
உயிர் பிரிதல்
எனக்குப் பிடித்தமே!

No comments:

Post a Comment